
புகைப்படங்கள்

எளிய மக்களின் உரிமை குரலாய் ஓங்கி ஒலித்த சமூக நீதிப் போராளி, அய்யா இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளான இன்று, அவருக்கு எனது புகழ் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.




கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 17 அன்று, கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவிற்கான பணிகளை, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களுடன் இணைந்து, இன்று ஆய்வு செய்த பொழுது.

சமத்துவமும் சகோதரத்துவமும் தமிழ்நாட்டில் செழித்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஜூம்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள் கூறிய போது.

சமத்துவமான தமிழ் நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நடைபெறும், கரூர், நெரூர் வடபாகம், பெரிய காளியப்பாளையம் அருள்மிகு காசி விநாயகர், அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட போது.

இன்று கரூருக்கு வருகை புரிந்த கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் திரு. கே. என். நேரு அவர்களை வரவேற்ற போது.

கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் ஊராட்சி ஒன்றிய மக்கள் பெரும் பயனடையும் வகையில், ரூ 3.01 கோடியில் காதப்பாறை ஊராட்சியில் புதிய குடிநீர் திட்டம், ரூ 6.66 கோடி மதிப்பில் பஞ்சமாதேவி ஊராட்சியில் புதிய குடிநீர் திட்டம், ரூ 2.65 கோடியில் மண்மங்கலம் ஊராட்சிக்கு மேட்டுப்பாளையம் நிலத்தடி தொட்டியில் இருந்து புதிய குடிநீர் விநியோகத் திட்டம் என மொத்தமாக ரூ 12.32 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கரூர் சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறேன்.




அரசின் சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒருபகுதியாக, இன்று கரூர் மாநகராட்சி, வடக்கு காந்திகிராமம், முல்லை நகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட போது.. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கரூர் கோடங்கிப்பட்டியில், வருகின்ற செப்டம்பர் 17 அன்று நடைபெறவிருக்கும் கழகத்தின் கொள்கை திருவிழாவாம், தி.மு.க முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை இன்று பார்வையிட்ட போது.




மக்களை தேடி மருத்துவம் திட்டம் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும், கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாமை துவக்கி வைத்த போது.

மாநிலம் முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, குளித்தலை கிழக்கு ஒன்றியம், இரணியமங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் திருமிகு. நீரோஷா (மாவட்டத் துணைச் செயலாளர் – 2021 குளித்தலை சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர்), திருமிகு. லதா ரவி ( மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்), திரு. முத்துக்குமார் ( ஒன்றிய துணைச் செயலாளர்), திரு. ரவி, திரு. வெங்கடேஷ் ( இரணியமங்கலம் ஊராட்சி கழக செயலாளர்), திரு. ராஜீவ், திரு. சரவணன், திரு. பார்த்திபன், திரு. துரைமுருகன், திரு. பன்னீர், திருமிகு. வள்ளி ரவி, திருமிகு. ரேவதி, திருமிகு. முத்துலட்சுமி ஆகியோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.